ARTICLE AD BOX

கோவை: கோவையில் வழிப்பறியில் ஈடுபட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற திருடர்கள் மேம்பால சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், இருவரது கால்களும் முறிந்தன. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களை போலீஸார் கைது செய்தனர்.
கோவை ரத்தினபுரி தில்லை நகரை சேர்ந்தவர் கவுதம் (29). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று (ஏப்.8) இரவில், பணிமுடிந்து தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கவுதம் கையில் இருந்த செல்போனை பறித்து விட்டு தப்பினர். இதுகுறித்து கவுதம் அளித்த புகாரின் பேரில், ரத்தினபுரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இந்நிலையில், செல்போனை பறித்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற இருவரும் ரத்தினபுரியில் உள்ள மேம்பால தடுப்புச்சுவர் மீது அவர்களது வாகனம் மோதியுள்ளது.

8 months ago
8







English (US) ·