ARTICLE AD BOX

சென்னை: ‘படை தலைவன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘ரமணா 2’ படம் எடுப்பது குறித்த தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
சகாப்தம், மதுரை வீரன் படங்களைத் தொடர்ந்து விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்துக்கு ‘படை தலைவன்’ என தலைப்பு வைத்துள்ளனர். இதை, வால்டர், ரேக்ளா படங்களை இயக்கிய யு.அன்பு இயக்கியுள்ளார். விஜே கம்பைன்ஸ் சார்பில் ஜகநாதன் பரமசிவம் வழங்கும் இந்தப் படத்துக்கு எஸ்.ஆர்.சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார். திரைக்கதை, வசனத்தை பார்த்திபன் தேசிங்கு எழுதியுள்ளார். கஸ்தூரி ராஜா, யாமினி சுந்தர், முனீஸ்காந்த் உட்பட பலர் நடிக்கின்றனர்.

7 months ago
8





English (US) ·