சமூக ஊடகங்களில் நீதிபதி குறித்து விமர்சனம்: தவெக நிர்வாகிகள் 2 பேர் உள்பட 4 பேர் கைது

2 months ago 4
ARTICLE AD BOX

சென்னை: சமூக ஊடகங்​களில் நீதிபதி குறித்து விமர்​சனம் செய்த தவெக நிர்​வாகி​கள் 2 பேர் உள்பட 4 பேர் கைது செய்​யப்​பட்டனர். தவெக தலை​வர் விஜய், கரூரில் கடந்த 27-ம் தேதி பங்​கேற்ற பிரச்​சார கூட்​டத்​தில் சிக்கி 41 பேர் பரி​தாப​மாக உயிரிழந்தனர். இந்த சம்​பவம் தொடர்​பான வழக்​கு, கடந்த 3-ம் தேதி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் விசா​ரணைக்கு வந்​தது.

அந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்ற நீதிப​தி, தவெக தலை​வர் விஜய்க்கு கண்​டனம் தெரி​வித்​தார். பிரச்​சார கூட்​டத்​துக்கு விஜய் சென்ற பேருந்து விபத்தை ஏற்​படுத்​தி​யது தொடர்​பாக வழக்​குப்​ப​திவு செய்​யப்​ப​டாதது ஏன்? அந்த பேருந்தை ஏன் பறி​முதல் செய்​ய​வில்​லை? என்​றும் பல்​வேறு கேள்வி​களை எழுப்​பி​னார்.

Read Entire Article