சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுநீர் ஊற்றி தாக்குதல்: 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது

9 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: சவுக்கு சங்​கர் வீட்​டில் தாக்குதல் நடத்​திய விவ​காரத்தில் 2 பெண்​கள் உள்பட 5 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். பிரபல யூடியூபர் சவுக்கு சங்​கர், ‘கழிவு நீர் அகற்று சேவை வாக​னங்கள் ஒப்​பந்​தம்’ தொடர்​பாக விமர்சனம் செய்​திருந்​தார். இதையடுத்​து,சவுக்கு சங்​கர் தங்​களை இழி​வுபடுத்தி விட்​ட​தாகக் கூறி தூய்​மைப் பணி​யாளர்​கள், சென்னை கீழ்ப்​பாக்​கத்​தில் உள்ள சவுக்கு சங்​கர் வீட்​டின் முன்பு கடந்த திங்​கள்​கிழமை காலை திரண்​டனர்.

திடீரென அவர்​கள், வீட்​டின் பின்​பக்​கக் கதவை உடைத்து உள்ளே நுழைந்​து, பொருட்​களை சேதப்​படுத்​தினர். வீட்​டுக்​குள் கழிவு நீரை​யும் ஊற்​றினர். மேலும், சவுக்கு சங்​கரின் தா​யாருக்​கும் கொலை மிரட்​டல் விடுத்​தனர். இந்த சம்​பவத்​துக்கு அதி​முக, பாஜக உள்பட பல்​வேறு அரசியல் கட்சி தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்​திருந்​தனர்.

Read Entire Article