ARTICLE AD BOX

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். 6 பேர் காயமடைந்துள்ளனர்.
வெம்பக்கோட்டை அருகே உள்ள கங்கர்செவல்பட்டியில் சத்திரப்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிப் பொருள் கட்டுப்பாட்டு துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந்த ஆலையில் 40-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸிரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ளதால் பட்டாசு உற்பத்தி தீவிரமடைந்துள்ளது. இன்று 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருந்தனர்.

3 months ago
5







English (US) ·