ARTICLE AD BOX

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்ற முயன்ற அவரது தாயும், கணவரும் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள மடத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா (50). தொழிலாளி. இவரது மனைவி மகேஷ் (32). நேற்று காலை வீட்டின் அருகே ஜெயப்பிரகாஷ் என்பவருக்குச் சொந்தமான தோட்டக் கிணற்றில் மகேஷ், அவரது தாய் ராசம்மாள் (55) இருவரும் துணி துவைத்துக்கொண்டிருந்தனர். அப்போது, கால் தவறி மகேஷ் கிணற்றுக்குள் விழுந்தார். அவரை காப்பாற்ற ராசம்மாளும் கிணற்றுக்குள் குதித்தார்.

7 months ago
8







English (US) ·