ARTICLE AD BOX

மான்செஸ்டர்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 304 ரன்கள் குவித்தது. இது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஐசிசி-யின் முழு நேர உறுப்பினர் அணிக்கு எதிராக குவித்த அதிகபட்ச ரன்னாகும். இதற்கு முன்பு வங்கதேச அணிக்கு எதிராக இந்தியா 297 ரன்கள் குவித்தது அதிகபட்ச ரன்னாக இருந்தது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் காம்பியாவுக்கு எதிராக ஜிம்பாப்வே அணி 344 ரன்கள் குவித்தது அதிகபட்ச ரன்னாக உள்ளது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-1 என வெற்றி பெற்றது. இந்நிலையில், கடந்த 10-ம் தேதி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்கியது. இந்த தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

3 months ago
5







English (US) ·