ARTICLE AD BOX

செங்கல்பட்டு: சிங்கபெருமாள்கோவில் அடுத்த திருத்தேரி பகுதியில் மதுரை நோக்கி சென்ற காரின் மீது பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியதில் காரில் பயணித்த 1வயது குழந்தை உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேர் காயமடைந்தனர்.
மதுரை பொதும்பூர் சிக்கந்தர் சாவடி ஜானகி நகர் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது மகன் கார்த்திக் (40). இவர் சென்னை பேரூரில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்று விட்டு தனது மனைவி நந்தினி (32) குழந்தைகளான 7வயது சிறுமி இளமதி, 1 வயது குழந்தை சாய்வேலன் மற்றும் நந்தினியின் தந்தை அய்யனார் (70), அவரது மனைவி தெய்வ பூஞ்சாரி (52) மற்றும் கார் ஓட்டுநர் சரவணன் (24) ஆகியோர் மதுரை நோக்கி ஹூண்டாய் காரில் சென்றனர்.

8 months ago
9







English (US) ·