ARTICLE AD BOX

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலைநகர் போலீஸார் ஆந்திராவை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி நரசிம்மா உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சா, 3 செல்போன்கள், ஒரு பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிய ஓடிய 2 பேரையும், தலைமறைவான ஒருவரையும் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் நடமாட்டத்தை குறைக்க அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

6 months ago
7







English (US) ·