ARTICLE AD BOX

கடலூர்: சிதம்பரம் அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம் அருகே உள்ள சி.கொத்தங்குடி முத்தையா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் ராமநாதன் (40). இவர் நெய்வேலி என்எல்சி ஊழியர். இந்நிலையில், இன்று (ஜூன் 9) காலை ராமநாதன் அவரது பைக்கில் சிதம்பரத்திலிருந்து புவனகிரி செல்லும் பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிதம்பரத்தில் அச்சகம் வைத்துள்ள வயலூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த அருள்பிரகாசம் மகன் சுந்தரேசன் (47) என்பவர் அவரது பைக்கில் எதிரே வந்துள்ளார். இதில் எதிர்பாராத விதமாக 2 பைக்குகளும் மோதியது.

6 months ago
7







English (US) ·