ARTICLE AD BOX

மதுரை: சித்திரை திருவிழாவையொட்டி, மதுரையில் போலீஸார் மாறுவேடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் சித்திரை திருவிழா இன்று (ஏப்.29) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, பாதுகாப்பு குறித்து மாவட்டம் நிர்வாகம் மற்றும் மாநகர், மாவட்ட காவல் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, முன்னேற்பாடுகளை மேற்கொள்கின்றனர். இத்திருவிழாவில் குற்றச் செயல்களை தடுக்க, காவல்துறையினர் பல்வேறு வியூகங்களை வகுத்து, அதற்கான திட்டங்களை அமல்படுத்த உள்ளனர்.
இதன் ஒருபகுதியாக, மாநகர் முழுவதும் பகுதி வாரியாக சாதாரண உடை அணிந்து போலீஸார் மாறுவேடத்தில் ரோந்து பணியில் ஈடுபட காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார். மாநகர நுண்ணறிவு பிரிவு, உள்ளூர் போலீஸார் இணைந்து 2 அல்லது 3 பேர் மட்டும் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தலைப்பாகை, கைலி, அழுக்கு சட்டை அணிந்து சிக்னல், உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து செல்கின்றனர்.

8 months ago
8







English (US) ·