ARTICLE AD BOX

ராணிப்பேட்டை: சிப்காட் அருகே உறவினருடன் சென்ற இளம்பெண்ணை மடக்கி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 இளைஞர்களை, போலீ ஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த தெங்கால் பாலாறு மேம்பாலம் நவ்லாக் வழியாக நேற்று முன்தினம் இரவு 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் உறவினர் சுபநிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, தனது உறவினருடன் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
நகை மற்றும் பணம் பறிப்பு: நவ்லாக் அருகே இருவரும் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு, நின்று தனியாக பேசிக்கொண்டிருந்தனர். இவர்களை, நோட்டமிட்ட 3 பேர் கொண்ட கும்பல் அவர்களை பின் தொடர்ந்து வந்தனர்.

3 months ago
5







English (US) ·