ARTICLE AD BOX

சென்னை: 14 வயது சிறுவன் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இதில் 2 பேர் காயம் அடைந்தனர். வடபழனியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் 14 வயதுடைய தனது மகனிடம் கார் சாவியை கொடுத்து குமரன் நகர் 7-வது தெருவில் நிறுத்தி வைத்துள்ள காரை தூசி படாமல் கவர் போட்டு மூடிவிட்டு கூறி அனுப்பியுள்ளார்.
ஆனால், அந்த சிறுவனோ தன்னுடன் நண்பரை காரில் ஏற்றிக்கொண்டு குமரன் நகர் பிரதான சாலை வழியாக, காரில் ஒரு ரவுண்ட் சுற்றி வருவதற்காக காரை ஓட்டிச் சென்றுள்ளார்.

8 months ago
8







English (US) ·