ARTICLE AD BOX

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே சிறுவன் புகைப்பது போல சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அந்த வீடியோவை வெளியிட்ட இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வீடியோ வெளிவர காரணமாக இருந்த ஆயுதப்படை காவலர்கள் 2 பேரை திருப்பத்தூர் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், 102 ரெட்டியூர் கிாரமத்தைச் சேர்ந்தவர் 8 வயது சிறுவன் பொது இடத்தில் புகைப்பது போன்ற வீடியோ காட்சி ஒன்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆனது. இதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில், தனிப்படை காவல் துறையினர் சிறுவன் புகைப்பது போல வெளியான வீடியோ குறித்து விசாரணை நடத்தியதில், 102 ரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த அத்னான் (20) என்பவர் தான் இந்த வீடியோவை வெளியிட்டது தெரியவந்தது.

6 months ago
7







English (US) ·