சிறை காவலர் உட்பட 3 பேரை தாக்கிய திமுக கவுன்சிலர் மீது வழக்கு

4 months ago 5
ARTICLE AD BOX

திருவாரூர்: ​திரு​வாரூரில் சிறைக் காவலர் உட்பட 3 பேரை தாக்​கிய​தாக திமுக கவுன்​சிலர் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்​பட்டுள்ளது. திரு​வாரூர் நகராட்​சிக்கு உட்​பட்ட 30-வது வார்டு கட்​டபொம்​மன்தெரு​வைச் சேர்ந்​தவர் கிஷோர்​(26). இவரது வீட்டின் முன்​பு, அதே பகு​தி​யில் உள்ள முத்​து​மாரி​யம்​மன் கோயில் திருப்​பணி தொடர்​பான பிளக்ஸ் பேனரை 30-வது வார்டு திமுக கவுன்​சிலர் புருஷோத்​தமன் மற்​றும் அவரது ஆதர​வாளர்​கள் நேற்று முன்​தினம் வைத்​தனர்.

இதுகுறித்து கவுன்​சிலர் புருஷோத்​தமனிடம் கிஷோர் மற்​றும் அவரது நண்​பர்​களான விக்​னேஷ், சிறைக் காவலர் இளங்​கோவன் ஆகியோர் கேட்​ட​போது, இருதரப்​பினருக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டு, பின்​னர் கைகலப்​பானது. இதில், கிஷோர், விக்​னேஷ் காயமடைந்​து, திரு​வாரூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர்.

Read Entire Article