ARTICLE AD BOX

காரைக்குடி: சிவகங்கையில் சொகுசு காரில் வலம் வந்து 2 ஆண்டுகளாக 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் திருடியவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 46 பவுன் நகைகள், ரூ.14.70 லட்சம், 3 கார்களை பறிமுதல் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி - குன்றக்குடி பகுதிகளில் சில மாதங்களுக்கு முன்பு பூட்டிய வீடுகளில் தொடர்ந்து நகை, பணம் திருடுபோனது. குற்றவாளிகளைப் பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் உத்தரவின் பேரில் காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன் மேற்பார்வையில் குன்றக்குடி சார்பு - ஆய்வாளர் பழனி குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

7 months ago
8







English (US) ·