சீமான் வீட்டில் தள்ளுமுள்ளு: காவல் ஆய்வாளருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்

9 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனைக் கிழித்தபோது ஏற்பட்ட மோதல் விவகாரத்தில், காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்​சுமி அளித்த புகாரின்​ பேரில், விசாரணைக்கு ஆஜராகுமாறு நீலாங்​கரை​யில் உள்ள சீமான் வீட்​டின் கதவில் கடந்த 27ம் தேதி சம்மன் ஒட்டப்​பட்​டது. இந்த சம்மனை வீட்டின் பணியாளர் கிழித்த நிலையில், அங்கு வந்த காவல் துறையினரை சீமான் வீட்​டில் பாது​காவலராகப் பணியாற்றி வரும் ஓய்வு​ பெற்ற எல்லை பாது​காப்புப் படை வீரர் அமல் ​ராஜ் தடுத்து நிறுத்​தினார்.

Read Entire Article