சூலூர் அருகே பெண்ணை தாக்கி நகை பறித்த சம்பவம்: 2 பேர் கைது, துப்பாக்கி பறிமுதல்

4 months ago 5
ARTICLE AD BOX

கோவை: சூலூர் அருகே சுத்தியலால் பெண்ணை தாக்கி நகை பறித்த வழக்கில் மூவரை போலீஸார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து துப்பாக்கி, 18 தோட்டாக் கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை மாவட்டம் சூலூர் சுகந்தி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி மேரி ஜூலியானா(47). மளிகைக் கடை நடத்தி வருகின்றனர்.

கடந்த 28-ம் தேதி மேரி ஜூலியானா கடையில் இருந்தபோது, சிகரெட் வாங்க வந்த இரண்டு பேர், சுத்தியலால் மேரி ஜூலியானாவை தாக்கி 4 பவுன் நகையை பறித்துச் சென்றனர். சூலூர் போலீஸார் வழக்குப்பதிந்து, ராசிபாளையம் பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த இருவரை நேற்று முன்தினம் பிடித்து விசாரித்தனர்.

Read Entire Article