ARTICLE AD BOX

ஓசூர்: சூளகிரி அருகே மாங்காய் பாரம் ஏற்றி வந்த சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்ததில், பெண் உயிரிழந்தார். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சப்படி கிராமத்திலிருந்து இன்று மாலை மாங்காய் பாரம் ஏற்றிய சரக்கு வாகனம் கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்தது. வாகனத்தை ஓட்டுநர் ஸ்ரீநாத் (23) ஓட்டினார். வாகனத்தில் மாங்காய் மீது தொழிலாளர்கள் அமர்ந்து பயணம் செய்தனர். சூளகிரி அருகே கொல்லப்பள்ளி பகுதியில் வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்தது.

7 months ago
8







English (US) ·