ARTICLE AD BOX

சென்னை: சென்னை செங்குன்றம் மசூதி அருகே வெடிகுண்டு கொண்டு செல்லப்படுவதாக மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், வதந்தி பரப்பிய இளைஞரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை தேனாம்பேட்டை டிஎம்ஸ் வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய மர்ம நபர், செங்குன்றம் பாடியநல்லூரில் உள்ள மசூதி அருகே வெடிகுண்டு, நவீன ரக துப்பாக்கிகளை சிலர் எடுத்துச் செல்வதாகவும், இதுகுறித்த தகவலை காவல்துறைக்கு தெரிவிக்குமாறும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

7 months ago
8







English (US) ·