ARTICLE AD BOX

சென்னை: போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக நைஜீரியா, சூடான் நாடுகளைச் சேர்ந்த 10 பேர் உட்பட 17 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பிற மாநிலங்களிலிருந்து சென்னைக்கு போதைப் பொருள் கடத்தும் கும்பலை கைது செய்யும் வகையில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு என்ற சிறப்புப் பிரிவு சென்னையில் தொடங்கப்பட்டது.
அப்பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக கடந்த மார்ச் 9-ம் தேதி அண்ணாசாலையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் பெங்களூருவைச் சேர்ந்த நிக்கில் என்பவர் கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். இவர்கள் கொடுத்த தகவலின்பேரில் 2 பேர் சென்னையிலும், ஒருவர் பெங்களூருவிலும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

8 months ago
8







English (US) ·