சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது

8 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருப்போர் அறையில் பயணிகளின் செல்போன்கள் திருடிய வழக்கில், இருவரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். உத்திரபிரதேசம் மாநிலம் குஷிநகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகலாத் சிங் மகன் சிவம் சிங்(18). இவர் சொந்த ஊர் செல்வதற்காக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் காத்திருப்போர் அறையில் கடந்த 6-ம் தேதி அமர்ந்திருந்தார்.

அங்கு இவர் தனது செல்போனை சார்ஜிங் முனையில் சார்ஜ் செய்ய வைத்துவிட்டு, தனது இருக்கையில் அமர்ந்திருந்தார். சிறிது நேரம் கழித்து, சார்ஜிங் முனையில் செல்போனை எடுக்க சென்றபோது, அங்கு செல்போன் மாயமாகி இருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் சென்ட்ரல் ரயில்வே போலீஸில் புகார் கொடுத்தார்.

Read Entire Article