சென்னை | 12-ம் வகுப்பு மாணவியிடம் செல்போன் பறித்த சிறுவன் கைது

10 months ago 9
ARTICLE AD BOX

சென்னை: சென்னை திரு​வல்​லிக்​கேணி​யைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த 22-ம் தேதி ஐஸ்அவுஸ், டாக்டர் நடேசன் சாலை​யில் தீர்த்​த​பாலீஸ்​வரர் கோயில் அருகே செல்​போனில் பேசி​யபடி நடந்து சென்று கொண்​டிருந்​தார். அப்போது, அவ்வழியே ஆக்டிவா வகை இருசக்கர வாகனத்​தில் வந்த இருவர் கண் இமைக்​கும் நேரத்​துக்​குள் மாணவி​யின் செல்​போனை பறித்து தப்பினர்.

அதிர்ச்சி அடைந்த மாணவி இதுகுறித்து, அவரது தந்தை​யிடம் கண்ணீர் மல்க தெரி​வித்​தார். இதையடுத்து, மாணவி சார்​பில் அவரது தந்தை ஐஸ்அவுஸ் காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தார். அதன்​படி, அக்காவல் நிலைய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். முதல் கட்டமாக சம்பவ இடம் மற்றும் அதை சுற்றி பொருத்​தப்​பட்​டிருந்த சிசிடிவி கேமரா காட்​சிகளை கைப்​பற்றி அதன் அடிப்​படை​யில் துப்பு துலக்​கினர்.

Read Entire Article