ARTICLE AD BOX

மயிலாப்பூரில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உறவினருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மயிலாப்பூரில் 13 வயதுள்ள சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். பெற்றோர் வேலைக்குச் செல்வதால் பள்ளி முடிந்த பிறகு அந்தச் சிறுமி வீட்டில் தனியாக இருப்பது வழக்கம். அப்போது சிறுமியின் வீடு அருகே வசிக்கும் 38 வயதான உறவினர், அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இது குறித்து வெளியே சொல்லக்கூடாது என மிரட்டி அடிக்கடி உறவு கெ்ாண்டுள்ளார்.

9 months ago
8







English (US) ·