ARTICLE AD BOX

மேடவாக்கம்: சென்னை மேடவாக்கம் அருகே வாடகை வீட்டில் பதுங்கி இருந்த அசாமை சேர்ந்த தீவிரவாதி அபுசலாம் அலியை தமிழக க்யூ பிரிவு போலீஸார் உதவியுடன் அசாம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
வங்கதேச நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தீவிரவாத அமைப்பு ‘அன்சருல்லாபங்களா’. இது, தடைசெய்யப்பட்ட அல்கொய்தா இயக்கத்துடன் நேரடி தொடர்பு உடையது. இந்த அமைப்பை சேர்ந்த தீவிரவாதி அபுசலாம் அலி என்பவர் சென்னை அருகே பதுங்கி இருப்பதாக அசாம் மாநில போலீஸார் சமீபத்தில் செல்போன் சிக்னல் உதவியுடன் கண்டுபிடித்தனர். இவர் அசாமின் துப்ரி மாவட்டத்தை சேர்ந்தவர். இவரை பற்றி சென்னையில் உள்ள க்யூ பிரிவுக்கு அசாம் போலீஸார் தகவல் கொடுத்தனர்.

10 months ago
9







English (US) ·