ARTICLE AD BOX

சென்னை: ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில், தொழில் அதிபரிடம் ரூ.1.43 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். பெருங்குடியில் வசிப்பவர் கார்த்திக் (36). பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவர், கடந்த மார்ச் மாதம் சமூக வலைதளத்தில் வந்த ஆன்லைன் வர்த்தக முதலீட்டு விளம்பரம் ஒன்றை பார்த்தார்.
அதில், முதலீட்டுக்கு இரட்டிப்பு லாபம் பெற்றுத் தருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதை உண்மை என நம்பிய கார்த்திக், அவர்கள் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு அதில் கூறப்பட்ட வாட்ஸ்-ஆப் குழு ஒன்றில் இணைந்தார்.

2 months ago
3







English (US) ·