ARTICLE AD BOX

சென்னை: ஈஸ்டர் பண்டிகை கொண்டாட வந்த இடத்தில் பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக 2 பேரை கைது செய்து போலீஸார் விசாரிக்கின்றனர். சென்னை வியாசர்பாடி உதயசூரியன் நகர், 11வது பிளாக் பகுதியில் வசித்து வந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ராஜ் என்ற தொண்டை ராஜ் (40).
இவர் மீது கொலை உள்பட 12 குற்ற வழக்குகள் உள்ளது.‘ஏ பிளஸ்’ பிரிவு ரவுடியான இவருக்கு எதிர் தரப்பிலிருந்து தொடர்ந்து மிரட்டல் வந்ததையடுத்து, இருப்பிடத்தை கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் மணலி சின்னசேக்காடு, வேதாச்சலம் தெருவுக்கு மாற்றினார்.

8 months ago
9







English (US) ·