ARTICLE AD BOX

சென்னை: அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (32). எம்பிஏ பட்டதாரியான இவர் காவல் துறையில் உதவி ஆய்வாளராக (எஸ்.ஐ.) பணியில் சேரும் முயற்சியில் இருந்தார். இதற்கான தேர்வையும் எழுதினார். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. அப்போது அவருக்கு காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (39) என்பவரது அறிமுகம் கிடைத்தது.
அர்ச்சகரான ரஞ்சித் குமார், தனக்கு அரசு உயர் அதிகாரிகளை நன்கு தெரியும் எனவும், தான் நினைத்தால் அரசு வேலை பெற்றுத் தர முடியும் எனவும் கூறினார். இதை நம்பிய சீனிவாசன், எஸ்.ஐ. பணி பெற்றுத் தர கோரிக்கை விடுத்தார். இதற்கு பணம் தேவைப்படும் என்று கூறியதால் முன்பணமாக 2017 முதல் 2023 வரை பல்வேறு தவணைகளில் ரூ.18 லட்சம் கொடுத்தார்.

2 months ago
3







English (US) ·