ARTICLE AD BOX

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது ரசிகர்கள் போர்வையில் அடுத்தடுத்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட ஜார்க்கண்ட், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 8 பேர் கும்பலை சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 38 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, கடந்த மாதம் 28-ம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியின்போது 20-க்கும் மேற்பட்ட ரசிகர்களின் செல்போன்கள் அடுத்தடுத்து திருடப்பட்டன.

8 months ago
8







English (US) ·