சென்னை ஓபன் டென்னிஸ்: முதல் நாள் ஆட்டங்கள் ரத்து

2 months ago 5
ARTICLE AD BOX

சென்னை: சென்னை ஓபன் மகளிர் சர்​வ​தேச டென்​னிஸ் போட்டி நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள எஸ்​டிஏடி டென்​னிஸ் மைதானத்​தில் நேற்று தொடங்​கியது. ஆனால் மோந்தா புயல் காரண​மாக மழை பெய்​த​தால் மைதானத்​தில் உள்ள அனைத்து ஆடு​களங்​களி​லும் தண்​ணீர் தேங்​கியது. இதன் காரண​மாக முதல் நாளில் நடை​பெற இருந்த அனைத்து ஆட்​டங்​களும் ஒத்​திவைக்​கப்​பட்​டன.

2-வது நாளான இன்று ஒற்​றையர் பிரி​வில் முதல் சுற்று ஆட்​டங்​கள் அனைத்​தும் நடை​பெறும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதன்​படி இன்று 16 ஆட்​டங்கள் நடை​பெறுகின்​றன. பகல் 12 மணிக்கு போட்​டிகளை தொடங்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இரட்​டையர் பிரிவு ஆட்​டங்​கள் நாளை (29-ம் தேதி) தொடங்​கும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Read Entire Article