ARTICLE AD BOX

சென்னை: ஓய்வுபெற்ற ஐ.டி. நிறுவன அதிகாரி வீட்டில் 60 பவுன் நகை திருடப்பட்டுள்ளது. வேலை செய்த வீட்டிலேயே கைவரிசை காட்டி தப்பிய நேபாள தம்பதியை தனிப்படை அமைத்து நீலாங்கரை போலீஸார் தேடி வருகின்றனர். சென்னை கொட்டிவாக்கம், லட்சுமண பெருமாள் 3-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் மகேஷ் குமார் (60). ஐ.டி. நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றார். இவரது மனைவி அலமேலு. இவர்களுக்கு 2 பெண் பிள்ளைகள்; இருவருக்கும் திருமணமாகிவிட்டது.
மூத்த மகளின் தோழி மூலம் நேபாளத்தைச் சேர்ந்த ரமேஷ் (25) என்பவர் காவலாளியாகவும், அவரது மனைவி பினிதா (23) வீட்டு பணிப் பெண்ணாகவும் கடந்த ஒரு மாதத்துக்கு முன் மகேஷ் குமார் வீட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். ஓர் ஆண் குழந்தை உள்ள இந்த நேபாள தம்பதியை, வீட்டின் பின்பக்கம் உள்ள அறையில் தங்கவைத்துள்ளனர்.

7 months ago
8







English (US) ·