சென்னை | ஓய்​வு​பெற்ற ஐ.டி. நிறுவன அதி​காரி வீட்​டில் 60 பவுன் நகை திருட்டு

7 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: ஓய்​வு​பெற்ற ஐ.டி. நிறுவன அதி​காரி வீட்​டில் 60 பவுன் நகை திருடப்​பட்​டுள்​ளது. வேலை செய்த வீட்​டிலேயே கைவரிசை காட்டி தப்​பிய நேபாள தம்​ப​தியை தனிப்​படை அமைத்து நீலாங்​கரை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர். சென்னை கொட்​டி​வாக்​கம், லட்​சுமண பெரு​மாள் 3-வது குறுக்கு தெரு​வைச் சேர்ந்​தவர் மகேஷ் குமார் (60). ஐ.டி. நிறு​வனம் ஒன்​றில் அதி​காரி​யாக பணி​யாற்றி அண்​மை​யில் ஓய்வு பெற்​றார். இவரது மனைவி அலமேலு. இவர்​களுக்கு 2 பெண் பிள்​ளை​கள்; இரு​வருக்​கும் திருமணமாகிவிட்டது.

மூத்த மகளின் தோழி மூலம் நேபாளத்​தைச் சேர்ந்த ரமேஷ் (25) என்​பவர் காவலா​ளி​யாக​வும், அவரது மனைவி பினிதா (23) வீட்டு பணிப் பெண்​ணாக​வும் கடந்த ஒரு மாதத்​துக்கு முன் மகேஷ் குமார் வீட்​டில் வேலைக்கு சேர்ந்​துள்​ளனர். ஓர் ஆண் குழந்தை உள்ள இந்த நேபாள தம்​ப​தி​யை, வீட்​டின் பின்​பக்​கம் உள்ள அறை​யில் தங்​க​வைத்​துள்​ளனர்.

Read Entire Article