சென்னை: ஓய்வுபெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரியிடம் ரூ.6.58 கோடி மோசடி - கேரளாவை சேர்ந்த 3 பேர் கைது

7 months ago 8
ARTICLE AD BOX

ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி, ஓய்வு பெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரியிடம் ரூ.6.58 கோடி மோசடி செய்த கேரளாவைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரி ஒருவரின் வாட்ஸ் - அப் எண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறுஞ் செய்தி ஒன்று வந்தது. அதில், குறிப்பிட்ட வர்த்தக செயலியில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈடுபட்டலாம் என கூறப்பட்டிருந்தது. இதை நம்பிய அந்த அதிகாரி, அந்த குறுஞ் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்த இரண்டு வாட்ஸ் - அப் குழுக்களில் சேர்ந்தார். பின்னர், அந்த குழுக்களில் அனுப்பப்பட்ட இணைப்பு மூலம் ஆன்லைன் பங்கு வர்த்தக விண்ணப்பத்தை அந்த அதிகாரி பதிவிறக்கம் செய்துள்ளார்.

Read Entire Article