ARTICLE AD BOX

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ததாக கேரளாவைச் சேர்ந்தவர் உட்பட 11 முகவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை, டெல்லி அணிகள் மோதின. இதில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
முன்னதாக இந்த போட்டிக்கான டிக்கெட்களை சிலர் கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீஸார் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக கண்காணித்தனர்.

8 months ago
8







English (US) ·