ARTICLE AD BOX

சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வருகிறது. 5-வது நாளான நேற்று 5-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. மாஸ்டர்ஸ் பிரிவில் நெதர்லாந்தின் அனிஷ் கிரி, இந்திய கிராண்ட் மாஸ்டரான முரளி கார்த்திக்கேயனுடன் மோதினார். இந்த ஆட்டம் 73-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.
இந்திய கிராண்ட் மாஸ்டரான விதித் குஜராத்தி, ஜெர்மனி கிராண்ட் மாஸ்டரான வின்சென்ட் கீமருடன் பலப்பரீட்சை நடத்தினார். இந்த ஆட்டம் 40-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. உலகின் 5-ம் நிலை வீரரான இந்தியாவின் அர்ஜுன் ரிகைச,. சகநாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான பி.பிரணவுடன் மோதினார். இந்த ஆட்டம் 78-வது நகர்த்தலின் போது டிரா ஆனது.

4 months ago
5







English (US) ·