ARTICLE AD BOX

சென்னை: கொலை மிரட்டல் வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ தம்பி கைது செய்யப்பட்டார். சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பாலவாக்கம் அண்ணா சாலையை சேர்ந்தவர் குமரேசன் (73). பொறியாளரான இவர் மதுரவாயல், ராஜலட்சுமி நகரில் 1992-ம் ஆண்டு 4,800 சதுர அடியில் நிலம் வாங்கினார். அந்த இடத்தை 2022-ம் ஆண்டு சுத்தம் செய்ய சென்றபோது மற்றொரு நபர் அவருடைய இடம் என அபகரிக்க முயன்றதால், இதுகுறித்து நில அபகரிப்பு பிரிவில் குமரேசன் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி போலீஸ் பாதுகாப்புடன் குமரேசன் அவரது இடத்தை மீட்டெடுத்து சுற்றுசுவர் அமைத்துள்ளார். கடந்த மாதம் இந்த இடத்தை பார்க்கச் சென்றுள்ளார். அப்போது விருகம்பாக்கம் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ வி.என்.ரவியின் தம்பியும், நிலத்தரகர் சங்க மாநில தலைவரான வி.என்.கண்ணன் அந்த இடத்தில் மேலும் ஒரு பூட்டை போட்டு பூட்டி உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

10 months ago
9







English (US) ·