ARTICLE AD BOX

தாய், தந்தை இல்லாமல் தவித்த பள்ளி சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய சினிமா துணை நடிகை உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கோயம்பேடு, 100 அடி சாலையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பிரிவு போலீஸார் சம்பந்தப்பட்ட விடுதி அறைக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு சென்னையைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி ஒருவர் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். அவரை போலீஸார் பத்திரமாக மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

4 months ago
6







English (US) ·