ARTICLE AD BOX

சென்னை: சென்னையில் நேற்று நடந்த செயின் பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மும்பையைச் சேர்ந்த ‘இரானி’ கொள்ளைக் கும்பல், என்றும் அவர்களிடமிருந்து 6 சம்பவங்களில் பறிபோன அனைத்து நகைகளும் மீட்கப்பட்டுள்ளது, என்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
காவல்துறை எச்சரிக்கை: நேற்று (மார்ச் 25) காலை சைதாப்பேட்டையில் ஆரம்பித்து 6 செயின் பறிப்பு கொள்ளை நடந்தது. காலை 6 மணிக்கு துவங்கி 7 மணி வரை இந்த 6 சம்பவங்களும் நடந்திருக்கிறது. இந்த தகவல் கிடைத்தவுடனே, சென்னை மாநகரம் முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஏற்கெனவே தாம்பரம் அருகே இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளதால், வெளிமாநில கொள்ளையர்களாக இருக்க வாய்ப்புள்ளது எனக் கருதி, விமான நிலையம், ரயில்வே ஸ்டேஷன், மெட்ரோ வாகன நிறுத்தங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

9 months ago
8







English (US) ·