சென்னை | தன்னிடம் செயின் பறித்து தப்ப முயன்ற கொள்ளையனை போலீஸில் பிடித்து கொடுத்த இளம்பெண்

8 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: தன்னிடம் செயின் பறித்து தப்ப முயன்ற கொள்ளையனை இளம் பெண் ஒருவர் துணிச்சலாக பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளார். அவரை பொதுமக்களும், போலீஸாரும் வெகுவாகப் பாராட்டினர்.

திருச்சியைச் சேர்ந்தவர் யோகராணி (26). இவர் சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள அவரது அக்கா வீட்டில் தங்கியிருந்து வள்ளுவர் கோட்டத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வடபழனியில் உள்ள கோயில் ஒன்றுக்கு சென்றுவிட்டு, தி.நகர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தார்.

Read Entire Article