சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி 10 பேர் காயம்

6 months ago 7
ARTICLE AD BOX

விழுப்புரத்தில் இருந்து சிறிய சரக்கு லாரி ஒன்று உளுந்தூர்பேட்டை நோக்கி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. மடப்பட்டு மேம்பாலத்தின் வந்தபோது சாலையின் குறுக்கே ஆடு ஒன்று வந்தது.

அந்த ஆடு மீது மோதாமலிருக்க, சிறிய சரக்கு லாரி ஒட்டுநர் வாகனத்தை ஓரமாக திருப்ப முயன்றார். அப்போது சாலையின் நடுவே அமைக்கப் பட்டிருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான சிறிய சரக்கு லாரியின் பின்னால், ஹைதராபத்தில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற சரக்கு லாரியும், அதைத்தொடர்ந்து காஞ்சிபுரத்தில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் அடுத்தடுத்து மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 10 பேர் காயமடைந்தனர்.

Read Entire Article