சென்னை | ​திருமண தரகர் என வீட்டுக்கு வந்து நகை, செல்போன் திருடிய பெண் கைது

7 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: திருமண தரகர் என்று கூறி, வீட்டுக்கு வந்து நகை, செல்போனை திருடிக்கொண்டு தப்பிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கொடுங்கையூர் பக்தவச்சலம் தெருவை சேர்ந்தவர் மோகனா (54). இவரது கணவர் காலமாகிவிட்டார். 2 மகன்களும் மலேசியாவில் வேலை செய்கின்றனர்.

இதனால், மோகனா தனியாக வசிக்கிறார். மூத்த மகனுக்கு திருமண வயது ஆகிவிட்டதால், பெண் தேடி வந்துள்ளார். கடந்த 25-ம் தேதி காலை, பெண் ஒருவர் மோகனாவை செல்போனில் தொடர்பு கொண்டார். தனது பெயர் லட்சுமி என்றும், திருமண தரகர் என்றும் அறிமுகம் செய்து கொண்ட அவர், வரன் பார்ப்பது தொடர்பாக நேரில் பேச வேண்டும் என்று கூறி முகவரியை வாங்கிக் கொண்டார்.

Read Entire Article