ARTICLE AD BOX

சென்னை: இரும்பு ராடால் அடித்து தந்தையை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் சங்களா (42). இவர் தனது மகன் ரோகித் சங்களா (19) என்பவருடன் சேர்ந்து சென்னை, ஏழுகிணறு, வைத்தியநாதன் தெருவில் தங்கியிருந்து இனிப்பு பலகாரம் செய்யும் தொழில் செய்து வந்தார்.
ஜெகதீஷ் சங்களா ஊரில் உள்ள தனது மனைவியை கடுமையாக அடிக்கும் வழக்கம் கொண்டவராம். மேலும் வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் பொறுப்பு இல்லாமல் இருப்பதாக மகன் ரோகித் சங்களாவை அடிக்கடி திட்டி அவமானப்படுத்தி வந்துள்ளார். இதனால் தனது தந்தை மீது ரோகித் கடும் கோபத்தில் இருந்துள்ளார்.

9 months ago
10







English (US) ·