சென்னை | தூங்​கிக் கொண்​டிருந்த தந்தையை கொலை செய்து வீடியோ எடுத்த மகன் கைது

9 months ago 10
ARTICLE AD BOX

சென்னை: இரும்பு ராடால் அடித்து தந்​தையை கொலை செய்த மகன் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். ராஜஸ்​தான் மாநிலத்​தைச் சேர்ந்​தவர் ஜெகதீஷ் சங்​களா (42). இவர் தனது மகன் ரோகித் சங்​களா (19) என்​பவருடன் சேர்ந்து சென்​னை, ஏழுகிணறு, வைத்​தி​ய​நாதன் தெரு​வில் தங்​கி​யிருந்து இனிப்பு பலகாரம் செய்​யும் தொழில் செய்து வந்​தார்.

ஜெகதீஷ் சங்​களா ஊரில் உள்ள தனது மனை​வியை கடுமை​யாக அடிக்​கும் வழக்​கம் கொண்​ட​வ​ராம். மேலும் வீட்​டில் எந்த வேலை​யும் செய்​யாமல் பொறுப்பு இல்​லாமல் இருப்​ப​தாக மகன் ரோகித் சங்​களாவை அடிக்​கடி திட்டி அவமானப்​படுத்தி வந்​துள்​ளார். இதனால் தனது தந்தை மீது ரோகித் கடும் கோபத்​தில் இருந்​துள்​ளார்.

Read Entire Article