ARTICLE AD BOX

சென்னை: நாட்டு வெடிகுண்டுகளை வீசி எதிர் தரப்பினரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஆதம்பாக்கம் போலீஸார் நேற்று முன்தினம் அதிகாலை வானுவம்பேட்டை, தேவாலயம் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக நடந்து வந்த 2 பேர் போலீஸாரைக் கண்டதும் ஓடினர். அவர்களை போலீஸார் விரட்டிப் பிடித்தனர்.
பின்னர், காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில், பிடிபட்டவர்கள் ஆதம்பாக்கம், வானுவம்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன்(27), அதே பகுதியைச் சேர்ந்த ராபின்சன்(23) என்பது தெரியவந்தது.

9 months ago
8







English (US) ·