ARTICLE AD BOX

சென்னை: நீதிமன்றத்தால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சூளைமேடு, திருவள்ளுவர்புரம் 2-வது தெருவில் டிபன் கடை நடத்தி வருபவர் பாண்டியன் (64). இவர் கடையிலிருந்தபோது, அங்கு வந்த நபர் ஒருவர் கத்தி முனையில் மாமூல் கேட்டார். கொடுக்க மறுத்ததால் பாண்டியனை தாக்கி கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடிக் கொண்டு தப்பினார். அதிர்ச்சி அடைந்த அவர் இதுதொடர்பாக சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் கத்தி முனையில் மாமூல் கேட்டது சூளைமேடு நெல்சன் மாணிக்கம் ரோடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற கார்த்திக்கேயன் (25) என்பது தெரியவந்தது.

9 months ago
8







English (US) ·