சென்னை | பாதி விலையில் தங்கம் தருவதாக அறிவித்து ரூ.60 கோடி மோசடி: தலைமறைவான 4 பேர் கைது

3 months ago 4
ARTICLE AD BOX

சென்னை: ​பாதி விலை​யில் தங்​கம் தரு​வ​தாக கவர்ச்​சி​யான திட்​டங்​களை அறி​வித்து ரூ.60 கோடி மோசடி​யில் ஈடு​பட்ட குற்​றச்​சாட்​டில் தலைமறை​வாக இருந்த 4 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். சென்னை முகப்​பேரை தலை​மை​யிட​மாகக் கொண்டு ஏஆர்டி ஜுவல்​லர்ஸ் மற்​றும் நிதி நிறு​வனம் இயங்கி வந்​தது. இந்த நிறு​வனம் பாதி விலை​யில் தங்​கம் தரு​வ​தாக​வும், ரூ.1 லட்​சம் முதலீடு செய்​தால் வாரம் 3 சதவீதம் வட்டி உட்பட பல்​வேறு கவர்ச்​சிகர​மான திட்​டங்​களை விளம்​பரப்​படுத்​தி​யது.

இதை நம்பி ஏராள​மானோர் இந்த திட்​டத்​தில் சேர்ந்​தனர். மேலும், இந்​நிறு​வனம் தமிழகம் முழு​வதும் கிளை​களை நிறுவி கோடிக்​கணக்​கில் முதலீடு​களைக் குவித்​தது. ஆனால், உறு​தி​யளித்​த​படி நடந்​து​கொள்​ளாமல் ரூ.60 கோடிவரை மோசடி செய்​த​தாக பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் சென்னை அசோக் நகரில் உள்ள பொருளா​தார குற்​றப்​பிரி​வில் புகார் அளித்​தனர்.

Read Entire Article