சென்னை | பிரியாணி கடை உரிமையாளரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 3 ரவுடிகள் கைது

2 months ago 4
ARTICLE AD BOX

சென்னை: பிரி​யாணிக் கடை உரிமை​யாளரைத் தாக்கி வழிப்​பறி​யில் ஈடு​பட்ட ரவுடிகள் 3 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். சென்னை எம்​ஜிஆர் நகர், புகழேந்தி தெரு​வைச் சேர்ந்​தவர் பிரபு (35). கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்​து​வ​மனை அரு​கில் பிரி​யாணிக் கடை நடத்தி வரு​கிறார். இவர் நேற்று முன்​தினம் காலை கோயம்​பேடு செல்​வதற்​காக கே.கே.நகர், வன்​னியர் தெரு வழி​யாக இருசக்கர வாக​னத்​தில் சென்று கொண்​டிருந்​தார். அப்​போது அங்கு வந்த 3 பேர் கும்​பல் பிரபுவை வழிமறித்து பணம் கேட்​டது.

அவர் கொடுக்க மறுத்​த​தால் அரு​கில் கிடந்த உருட்​டுக் கட்​டை​யால் தாக்​கி, பிரபு​விட​மிருந்த பணத்தை வழிப்​பறி செய்து தப்​பியது. தாக்​குதலில் காயமடைந்த பிரபு கே.கே.நகர் அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்​றார். பின்​னர் அவர் கே.கே.நகர் காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தார். அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து அந்த பகு​தி​யில் பொருத்​தப்​பட்​டிருந்த சிசிடிவி கேமரா காட்​சிகள் மூலம் விசா​ரணை நடத்​தினர்.

Read Entire Article