சென்னை: பிளஸ் 1 மாணவனை கத்தியால் வெட்டிய சிறுவர்கள் - தனிப்படை அமைத்து போலீஸார் விசாரணை

7 months ago 8
ARTICLE AD BOX

சைதாப்பேட்டையில் பிளஸ் 1 மாணவனை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய சிறுவர்களை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

சென்னை சைதாப்பேட்டை ஜோதியம்மாள் நகரைச் சேர்ந்த 15 வயது சிறுவன், அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் வீடு வீடாகத் தண்ணீர் கேன் போடும் வேலையை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று மதியம் வழக்கம் போல சிறுவன் ஜோதியம்மாள் நகரில் தண்ணீர் கேன் போட்டு கொண்டிருந்த போது, அங்கு வந்த 7 சிறுவர்கள், அவரை கத்தியால் வெட்டினர். தப்பியோட முயன்ற போது, விடாமல் துரத்திச் சென்று வெட்டிவிட்டு ஓடிவிட்டனர்.

Read Entire Article