சென்னை: பூங்காவுக்கு வந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காவலாளிக்கு 10 ஆண்டு சிறை

9 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: பூங்காவுக்கு வந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில காவலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு பூங்காவுக்கு வழக்கமாக வருகை தரும் 13 வயது சிறுமியிடம், கோவிந்தா சார்கி (28) என்ற காவலாளி பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பூங்காவுக்கு வந்த அந்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸார் கடந்த 2023-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து கோவிந்தா சார்கியை கைது செய்தனர்.

Read Entire Article