ARTICLE AD BOX

பெசன்ட் நகர் கடலில் ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார். மாயமான மற்றொரு மாணவரை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.ஏ. பொருளாதாரம் முதலாம் ஆண்டு படிக்கும் 14 மாணவ- மாணவிகள், நேற்று காலை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைக்கு வந்தனர். அங்கு கடற்கரை மணற்பரப்பில் அமர்ந்திருந்து மாணவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களில், கவி பிரகாஷ் (21), ரோகித் சந்திரன் (20), முகமது ஆதில் (20) ஆகிய மூன்று மாணவர்கள் கடலில் இறங்கி குளித்தனர்.

2 months ago
4







English (US) ·