சென்னை: பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய பள்ளிச் சிறுமிகள் மீட்பு

2 months ago 4
ARTICLE AD BOX

சென்னை: எப்போதும், செல்போனும் கையுமாக இருந்த மாணவிகளை பெற்றோர் கண்டித்ததால் தோழிகளான மாணவிகள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். அவர்களை போலீஸார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

பாண்டி பஜார் பகுதியைச் சேர்ந்த 11 மற்றும் 10ம் வகுப்பு படித்து வரும் 15 மற்றும் 14 வயதுடைய 2 சிறுமிகள் தி.நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகின்றனர். இந்நிலையில், தோழிகளான இருவரும் கடந்த அக்.25-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பல இடங்களிலும் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Read Entire Article