ARTICLE AD BOX

சென்னை: போதைப் பொருளாக பயன்படுத்த, வலி நிவாரண மாத்திரைகள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
போதைப் பொருள் கடத்தல், பதுக்கல், விற்பனை செய்தலை தடுக்க சென்னை போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். போலீஸாரின் தொடர் நடவடிக்கையால் கஞ்சா, மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்களும், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இதனால், போதைப் பொருள் கடத்தல் கும்பல் வலி நிவாரண மாத்திரைகளை போதைப் பொருளாக விற்க ஆரம்பித்துள்ளன.

9 months ago
8







English (US) ·